ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் பலி

ஆஸ்திரேலியாவில் நேர்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பரபரப்பான நெடுஞ்சாலைக்குள் நுழையுமுன், வாகன ஓட்டுநர் ஒருவர் வழிவிட மறுத்ததால் அந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் தைவானையும் ஹொங்காங்கையும் சேர்ந்த ஊழியர்களும் அடங்குவர் என நம்பப்படுகிறது.

வாகனத்தை ஓட்டிச்சென்று உயிரிழந்த பெண்ணிடமே ஏனையோர் பணிபுரிந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனமோட்டியோடு நபர் ஒருவரும் பெண்கள் மூவரும் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஆபத்தான வகையில் வாகனமோட்டி மரணம் விளைவித்ததாக 29 வயது நபர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விபத்து நேர்வதற்குச் சில நிமிடங்கள் முன்பு மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விபத்து நேர்வதற்கு ஒரு நாளைக்கு முன், தாம் கஞ்சா புகைத்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content