இலங்கை செய்தி

யாழ் நாகர் கோவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

புத்தளம் தில்லையாடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடலட்டை தொழிலை முன்னெடுக்கும் முகமாக புத்தளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட படகுகள் , தொழிலில் ஈடுபடுத்தப்படாமல் நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (22) அதிகாலை குறித்த 10 படகுகளும் இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதனால் படகுகள் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content