ஏழை எளிய மக்களுக்கு இவ்வளவு உதவியா
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/1677824566664-1280x700.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களின்
83 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி 3-கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆன்மீக குரு பங்காரு அடிகளார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் சைக்கிள் கல்வி ஊக்கத்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட 115 விதமான நலத்திட்ட உதவிகளை 3100 ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன் ஆதிபராசக்தி மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி உள்ளிட்ட செவ்வாடை பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.