இலங்கை செய்தி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் – விசாரணையில் வெளிவந்த தகவல்

இரத்தினபுரி நிரியல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் முதித குடாகம தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை என மேலும் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பில் திறந்த தீர்மானம் எடுக்கப்பட்டு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் அவரது கைத்தொலைபேசி காணாமல் போயுள்ளதென தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சச்சினி ஜினாதரி என்ற பெண்ணின் சடலம் நேற்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக படிப்பை முடித்த சசினி, ரத்தினபுரியில உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் வழக்கம் போல்  வேலைக்கு சென்ற சசினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அது சச்சினியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கால்வாயில் இருந்தது. சச்சினியின் உடல் தண்ணீரில் புதைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த சசினி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content