இந்தியா செய்தி

நாக்பூரில் நைட் கிளப் முன்பு உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட இளம்பெண் -வைரலான வீடியோ

நாக்பூர் வார்தா சாலையில் செயல்படும் நைட் கிளப் ஒன்றுக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்துள்ளார். ஆனால், ஏற்கெனவே கிளப்புக்குள் வருவதற்கான நேரம் முடிந்திருந்ததால் புதிய உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என்று பாதுகாப்புக்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதை அந்தப் பெண் ஏற்கத் தயாராக இல்லை. அதனால் பாதுகாப்பாளர்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிளப் பெண் காவலர்களும் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். `என்னை உள்ளே விடவில்லையெனில் கிளப் முன்பு ஆடைகளைக் கழற்றுவேன் என்று கூறி மேலாடை மற்றும் ஸ்கர்ட்டை கழற்றியுள்ளார்.

கிளப் முன்பு உள்ளாடையுடன் நின்றுகொண்டு பவுன்சர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அதோடு கிளப்புக்கு வந்தவர்களிடம் தனது மொபைல் நம்பரையும் கொடுத்துக்கொண்டிருந்தார்.

Tokyo

இது குறித்து கிளப் உரிமையாளர் கரன் தக்கர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொலிஸார் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார்.

அந்தப் பெண்ணிடம் விசாரிக்க பொலிஸார் அவரைத் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் செய்த ரகளையால் கிளப் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கிளப்புக்கு வெளியில் நடந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி