இலங்கை

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தம் : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (05) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை நஷ்டஈடாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேவிடம் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதியரசர் முர்து பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த விடயத்தை ஆராயாமல் உரிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது என குறிப்பிட்டார்.

இதன்படி, கடல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!