இந்தியா செய்தி

கொல்கத்தாவில் தலை துண்டித்து 3 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பெண்

கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர், அவரது மைத்துனர் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் அதற்கு அவர் உடன்படாத காரணத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட, 35 வயதான அதியுர் ரஹ்மான் லஸ்கர், ஒரு கட்டுமான தொழிலாளி, அவளை கழுத்தை நெரித்து, தலையை துண்டித்து, அவரது உடலை மூன்று பகுதிகளாக துண்டித்து, எச்சங்களை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

ரீஜண்ட் பார்க் பகுதியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள், அது பாலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பலியானவரின் உடல் மற்றும் கீழ் உடல் அடுத்த நாள், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வரும் தன்னுடைய உறவுக்கார பெண்ணை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார் அதியுர் ரஹ்மான் லஸ்கர்.

அதற்கு, அந்த பெண் பலமுறை நிராகரித்ததாகவும், எனவே, தான் அவர் கொலை செய்ததாக ரஹ்மான் ஒப்பு கொண்டுள்ளார். இரண்டு வருடங்களாக கணவரைப் பிரிந்த அந்தப் பெண், ரஹ்மான் லஸ்கருடன் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விதிஷா கலிதா , “அந்த இளம்பெண், ரஹ்மானை தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார். அவரது தொலைபேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இளம்பெண்ணின் நிராகரிப்பு அவரை கோபப்படுத்தியது.

பின்னர் பணி முடிந்ததும், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, அவரின் கழுத்தை நெரித்து, தலையை துண்டித்து, உடலை மூன்று பகுதிகளாக துண்டித்து கொலை செய்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி