இலங்கை

இலங்கையில்சீரற்ற காலநிலை -கடற்படையினரின் உதவியுடன் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரீட்சைக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிரமங்களை எதிர்கொண்ட கல்வி பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை கடற்படையினர் படகுகள் மூலம் ஏற்றிச்சென்று பரீட்சைக்கு தோற்ற உதவினர்.

களுத்துறை மாவட்டம், பதுரலிய லத்பந்துர பகுதியில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் உதவின. க.பொ.த பரீட்சைக்கு தோற்விருந்த மாணவர்களை ஏற்றிச் செல்ல கடற்படை படகுச் சேவையை வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் போக்குவதற்கும் கடற்படை நிவாரணக் குழுக்கள் ஒத்தாசை புரிந்தன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிககளில் அதிகாலையில் தொழில்களுக்கு சென்ற மக்கள் மாலையில் வீடு திரும்புவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அகலவத்தை குடலிகம ஊடாக ஹொரண வீதியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களு கங்கையின் கிளை நதியான கலக் கால்வாய் நிரம்பி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதை அவதானிக்க முடிந்தது.

சில இடங்களில் நான்கு அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மக்கள் வெள்ளநீரில் நடந்த செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, ஒரு மணித்தியாலத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content