உலகம் செய்தி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கும் முடிவு கட்டுமாறு ட்ரம்பிடம் மன்றாடுகிறது உக்ரைன்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார்.

ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனின் இத்தகைய தீர்க்கமான முடிவுகள் மட்டுமே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து அமைதியை நிலைநாட்ட உதவும் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா காட்டும் இந்தத் துணிச்சலை ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் பயன்படுத்த வேண்டும் என்பதே உக்ரைன் தரப்பு வாதமாக உள்ளது.

அதேவேளை, ஈரான், அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஜேர்மன், ஓமான் உட்பட மேலும் பல நாடுகளும் வரவேற்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி