தென் அமெரிக்கா

பிரேசிலில் வெப்ப மண்டல புயலால் 44 பேர் பலி – பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் கரையோர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 60 நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் பல நகரங்கள் இருளில் மூழ்கின. மேலும் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயல் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்து 44 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 224 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். எனவே அந்த நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தகுந்த நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content