ஆஸ்திரேலியா

தொடர் கனமழையால் முடங்கிய ரயில்,விமான போக்குவரத்து ; ஆஸ்திரேலியாவில் மக்கள் பெரும் அவதி!

ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகின் பல பகுதிகளிலும் கடுமையான வறட்சியும், மிக அதிக அளவு கனமழையும் பெய்து இயற்கை சமநிலை பாதிப்படைகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் தற்போது மிக கனமழை பொழிந்து அந்நாட்டின் இயல்பு நிலையை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முற்றிலுமாக மூழ்கியுள்ளன.

மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரெட்பெர்ன் ரயில் நிலையத்தில் சிக்னல் இயந்திரங்கள் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன. பல கிலோ மீட்டர் தூரங்களுக்கு ரயில்வே பாதைகள் நீரால் சூழப்பட்டுள்ளன. எனவே அங்கு ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி பெரும் அவதி அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தங்கள் அவசர மற்றும் திட்டமிட்ட பயணங்களுக்கு வெளியூர்கள் செல்ல முடியாமல் ரயில் மற்றும் விமான பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content