இந்தியா செய்தி

தமிழகத்தில் சாலை விபத்தில் 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் இரவிபேரூரைச் சேர்ந்த 60 வயது ஜேக்கப் ஆபிரகாம் அவரது 55 வயது மனைவி ஷீபா மற்றும் அவர்களது 2 மாத பேரன் ஆரோன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜேக்கப், ஷீபா தம்பதியரின் மகளும், ஆரோனின் தாயுமான 21 வயது அலீனா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேக்கப் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்தனம்திட்டாவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர். விபத்து தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!