இலங்கை விளையாட்டு

அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவு

2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 103 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், பெதும் நிஷங்க 20 ஓட்டங்களையும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்று இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.

அயர்லாந்து தரப்பில் Mark Adair 4 விக்கெட்டுகளையும், Barry McCarthy 3 விக்கெட்டுகளையும், Gareth Delany 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அயர்லாந்து அணி சார்பில் Curtis Campher அதிபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 5 விக்கெட்டுக்களையும் மஹீஸ் தீக்‌ஷன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, இலங்கை அணி முதற்சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றிப் பெற்று தகுதிகாண் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content