ஜப்பானில் பிசாசாக மாறிய அரசியல்வாதியின் மகன்!!! நான்கு பேர் பலி
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/japan-1-jpg.webp)
ஜப்பானில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாகானோ மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியதோடு, முதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் சுட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஜப்பானில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் மகன் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவரது தந்தை ஜப்பானின் நகானோ நகர சபையின் சபாநாயகராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஜப்பானிய ஊடகங்கள் இன்று உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருந்தன.
ஏனென்றால் ஜப்பானில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தியால் குத்தப்படுவது அரிது. காவல்துறை அதிகாரிகளை சுடுவது மிகவும் அரிதானது.
முன்னதாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.