இலங்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க அந்நாட்டு தூதரகத்தின் உதவியை நாடும் வெளிவிவகார அமைச்சு!

மியன்மாரில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு அந்நாட்டு தூதரகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை ஒரு பிரச்சினையாக இருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு 32 இலங்கையர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மியன்மாரின் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது இலகுவான விடயமல்ல என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர்  ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சமீபத்திய தகவல்களின்படி, கிட்டத்தட்ட 56 இலங்கையர்கள் தற்போது அந்த பயங்கரவாதத்தின் பிடியில் உள்ளனர்.

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரிடம் சிக்கியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர்  செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் மியான்மரின் சைபர் கிரைம் மண்டலமான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

மியான்மருக்கு அண்மித்த மாநிலமான லாவோஸுக்கு தாய்லாந்தில் வேலை வழங்குவதாகச் சொல்லி இலங்கையர்கள் ஆள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது நாம் கண்டறிந்த இன்னொரு உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content