ஐரோப்பா

இத்தாலி கடற்பகுதியில் மூழ்கிய படகு : 07 பேர் மாயம்!

22 பேரை ஏற்றிச் சென்ற ஆங்கிலக் கொடியுடன் கூடிய பாய்மரப் படகு தெற்கு இத்தாலியில் உள்ள சிசிலி கடற்கரையில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஏழு பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 04 பிரித்தானியர், இரு கனேடியர், மற்றும் ஒரு அமெரிக்கர் மாயமானதாக கூறப்படுகிறது.

கடலோர காவல்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு வயது குழந்தை உட்பட 15 பேரை அவசரகால சேவைகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையின் போது சிசிலியை சூறாவளி தாக்கியதால் படகு மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்