உலகம் செய்தி

மீண்டும் அமைதி பேச்சு! பாகிஸ்தான் கூறுவது என்ன?

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சு மீண்டும் நடைபெறக்கூடும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif நம்பிக்கை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது. இது தோல்வியடைந்தையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தான் […]

செய்தி

துறைமுக முற்றுகை ஆபத்தானது: அமெரிக்காவை விளாசித் தள்ளுகிறது சீனா!

  • April 14, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட இந்த முற்றுகை, தற்போதைய தற்காலிக போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயைப் பெறும் சீனா, சர்வதேச சந்தை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை கருதி இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

இலங்கை செய்தி

புத்தாண்டில் ஜனாதிபதி செய்த ‘புதுமை’!

  • April 14, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நிலையில், அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றார். அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தில் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை திறப்பு: ராஜதந்திர முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஆதரவு!

  • April 14, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் தமது நாடு அதிக ஆர்வம் காட்டிவருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் Richard Marles தெரிவித்தார். உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க குறித்த நீரிணை கட்டாயம் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. எனினும், பிராந்தியத்தில் நிலவும் போரில் ஒரு நிரந்தர […]

உலகம் செய்தி

‘துறைமுக முற்றுகை’ ஈரானின் இறையாண்மையை மீறும் செயல்!

  • April 14, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையானது இறையாண்மை மீறும் செயல் என ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் Amir saeid iravani சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்குரிய ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐ.நாவுக்கான ஈரானியத் தூதுவர் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இது சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறும் செயல் எனவும் ஐ.நா. சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, இந்த முற்றுகை ஏனைய நாடுகளின் கப்பல்களையும் பாதிக்கும் என்பதால், கடற்பயண […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்துமாறு வலியுறுத்தி New York நகரில் போராட்டம்: பலர் கைது!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நியூயார் New York நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செனட்டர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு முழக்கமிட்டனர். திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி போராட்டத்தில் செல்சி மேனிங் போன்ற முக்கிய நபர்கள் கலந்துகொண்ட நிலையில், சுமார் 93 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கான ஆயத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் […]

விளையாட்டு

இன்று களமிறங்குகிறார் தோனி?

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings , Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 4 போட்டிகளில் ஆடியுள்ள CSK 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders 3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை மட்டுப்படுத்தியது Qantas!

  • April 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் (Qantas) தனது விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செலவு சுமார் 800 மில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணங்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டு சர்வதேச வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துவிட்டு, அதிக தேவையுள்ள பாரிஸ் மற்றும் […]

விளையாட்டு

Rajasthan Royals அணியை பந்தாடியது Sunrisers Hyderabad

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் Sunrisers Hyderabad அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணியின் வெற்றிநடைக்கு இதன்மூலம் தற்காலிகமாக முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ஓட்டங்களைப் […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் அமைதி பேச்சு: Marco Rubio பங்கேற்பு!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio யும் பங்கேற்கவுள்ளார். வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், லெபனான் மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் பங்கேற்று, தெற்கு லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். பெருமளவான உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெபனான் அரச தரப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி […]

error: Content is protected !!