ஆஸ்திரேலியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் அறிவிடக்கூடாது: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டுள்ளமை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வரவேற்றுள்ளார்.

“தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் இல்லாத சூழலை நாங்கள் விரும்புகிறோம். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிட்னியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“ ஆசியாவிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகள் ஆசியாவிற்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன.”எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேற்காசிய மோதலை தீர்க்க ஒருங்கிணைந்த சர்வதேச இராஜதந்திர முயற்சியை ஆஸ்திரேலியா ஆதரிப்பதாகவும், அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள இராணுவத் திட்டமிடுபவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான சர்வதேச பணியில் ஆஸ்திரேலியா பங்களிக்கும் என்றும் பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!