செய்தி

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

  • February 18, 2026
  • 0 Comments

பெரும் வெற்றியுடன் பாகிஸ்தான் Pakistan அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. T -20 உலகக்கிண்ண தொடரில் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா Namibia அணிகள் இன்று (18) மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி வெற்றிநடை!

  • February 18, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T20 உலக்கிண்ண தொடரின் 34-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் டெல்லியில் இன்று (18) மோதின. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் […]

இந்தியா

கூகுள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை Google CEO Sundar Pichai, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக Artificial Intelligence Impact Summit சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். இந்நிலையிலேயே கூகுள் நிறுவனத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் சகிதம் அவர், பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார். ஏ.ஐயில் இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் […]

இலங்கை செய்தி

பிரதமருடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை Harini Amarasooriya சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் Temple Trees நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் தொடர்பிலான வாய்ப்புகள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

அனிருத்தின் புது வழிப்பயணம்……!

  • February 18, 2026
  • 0 Comments

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ‘Albuquerque Records’ என்ற புதிய இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தமிழில் தற்போது ஜெயிலர் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தனது இசைப் பயணத்தில் புதிய கட்டத்தை இந்த நிறுவனத்தின் மூலம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படைப்பாற்றல், உரிமை மற்றும் கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை வணிகத்தை உருவாக்கும் எனது பயணத்தின் […]

Home Affairs Minister Tony Burke ஆஸ்திரேலியா

IS அமைப்புடன் தொடர்புடையவர் ஆஸ்திரேலியா வர தடை விதிப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபரை நாடு திரும்புவதற்கு ஆஸ்திரேலியா Australia தற்காலிக தடை விதித்துள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சர் Home Affairs Minister Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வடகிழக்குசிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் Damascus வழியாக ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே குறித்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது […]

இலங்கை கல்வி

பங்களாதேஷ் பிரதமருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை Tariq Rahman., இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியல்வாதிகளால் இனவாத ஆயுதம் கையிலெடுப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை […]

இலங்கை செய்தி

படையினர்மீதான தடை குறித்து பிரிட்டன் துணை பிரதமருடன் பேசப்பட்டதா?

  • February 18, 2026
  • 0 Comments

“ இலங்கை படையினர்மீதான தடைகள் பற்றி பிரிட்டன் துணை பிரதமருடன் பேச்சு நடத்தப்படவில்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லாமி முக்கிய பங்கு வகித்தார் என சிங்கள தேசியவாத அமைப்புன் குற்றஞ்சாட்டி இருந்தன. இந்நிலையில் படையினர்மீதான தடைகள் பற்றி பேசப்பட்டதா என […]

இலங்கை

இலங்கை, நெதர்லாந்து இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!

  • February 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe De Boer, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் , நெதர்லாந்து தூதுவரை வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன்களைக் கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். […]