இலங்கை செய்தி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவரஞ்சினி நியமனம்!

  • February 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் […]

பொழுதுபோக்கு

வேள்பாரி நாயகனாக தனுஷ்?

  • February 19, 2026
  • 0 Comments

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் நடிகராக தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் இது தொடர்பில் நடிகர் தனுஷ் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது. அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் இயக்குநர் […]

விளையாட்டு

T20 World Cup: இன்றைய போட்டிகள் தொடர்பான விபரம்…!

  • February 19, 2026
  • 0 Comments

ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 37 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலிItaly மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு Eden Gardens நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் – 8 சுற்றுக்குள் சென்றுவிட்டதால் இன்றைய ஆட்டம் அடுத்த கட்டம் தொடர்பில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 38 ஆவது லீக் போட்டியில் இலங்கை […]

அரசியல் இலங்கை செய்தி

‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்’ பற்றி கதைத்தால் இணைவு சாத்தியமில்லை!

  • February 19, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு ஐ.தே.கவின் UNP பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். அடுத்த தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ ஐக்கிய மக்கள் சக்தி SJP இணைவுக்கு தாமதப்படுத்தினால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும். இணைவுக்குரிய பேச்சு நடக்கும்போது அடுத்த ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!

  • February 19, 2026
  • 0 Comments

“இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், ” நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் […]

உலகம் செய்தி

இன்னும் கலையாத ‘போர் மேகம்’

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இன்னும் தணியவில்லை. அது தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கின்றது. ஈரான் உடனடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்றும், தவறினால் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்று அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவிதத்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் ராணுவப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன […]

இலங்கை செய்தி

ஓரணியில் திரண்டு பிரிட்டன் துணை பிரதமரை சந்தித்த தமிழ்த் தலைவர்கள்!

  • February 18, 2026
  • 0 Comments

இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரிட்டன் எப்போதும் துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டனின் துணை பிரதமருக்கும், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (18) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது என கூறப்படுகின்றது. அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து […]

இலங்கை செய்தி

ரணிலின் மனைவியிடமும் விசாரணை வேட்டை: 20 ஆம் திகதி அழைப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவிடம் Maithri Wickremesinghe குற்றப் புலனாய்வு பிரிவினர் CID வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு கொள்ளுபிட்டிய பொலிஸார் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிய குற்ற விசாரணைப் பிரிவுக்கே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. தனது தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]

இலங்கை செய்தி

பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பை நடத்தவுள்ள ஜனாதிபதி அநுர!

  • February 18, 2026
  • 0 Comments

‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று முதல் 20 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய ஜனாதிபதிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது. இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக […]

இலங்கை செய்தி

7 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

  • February 18, 2026
  • 0 Comments

இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக ஏழு மாதப் பெண் குழந்தையொன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியைச் சேர்ந்த நிரூபன் ரெஸ்மிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் […]