கடும் கட்டுப்பாடு – பிரித்தானியாவில் புகைப்பழக்கமற்ற தலைமுறை சட்டம் நிறைவேற்றம்
புகையிலை மற்றும் வேப் தொடர்பான புதிய மசோதா பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாகிறது. 2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பு பழக்கத்தை தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது “புகைப்பழக்கமற்ற தலைமுறை” உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. சட்டம் அமலுக்கு வந்தால், புகையிலை, வேப்பிங் மற்றும் நிகோடின் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் […]




