பொழுதுபோக்கு

எனக்கு மகளே கிடையாது… அது என் மகளே இல்லை – சுகன்யா பகீர்

1990-களில் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த நடிகை சுகன்யா குறித்து புதிய செய்தி ஒன்று உலாவருகின்றது

சினிமாவை போல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இல்லத்தரசிகளையும் கவர்ந்துள்ளார் சுகன்யா.

நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் கொண்ட சுகன்யா, ஒரு சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அதேபோல் பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கி உள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த சுகன்யா இணையத்தில் தனது மகளின் புகைப்படம் என குறிப்பிட்டு வைரலாகி வரும் போட்டோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது : “நானும் அந்த போட்டோவை பார்த்தேன். அதில் இருப்பது என்னுடைய மகள் இல்லை. அது என் அக்கா மகள். நான் தான் அதை என் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டேன். அதிலும் என் அக்கா மகள் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அது என் மகள் என பரவி பெரியளவில் வைரல் ஆனது. என்னுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவருக்குமே தெரியும். ஸ்ரீதர் ராஜகோபால் உடன் விவாகரத்து பிரச்சனை பல வருடங்களாகவே ஓடிக்கொண்டு இருந்தது.

சில மாதங்கள் தான் நாங்கள் சேர்ந்து இருந்தோம். அதன்பின்னர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்துவிட்டேன். ஆனால் விவாகரத்து கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. என் மகள் என பரப்பி வருகிறார்கள். வேண்டுமென்றே சுகன்யா பற்றி ஏதாவது பரப்ப வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். நானும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் அக்கா மகள் கூட இந்த செய்தியை பார்த்துவிட்டு, சித்தியால் நான் பேமஸ் ஆகிவிட்டேன் என ஜாலியா சொல்லிட்டு இருக்கா” என சுகன்யா கூறி உள்ளார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content