இலங்கையின் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : கனமழைக்கு வாய்ப்பு!
இலங்கையில் இன்று (10.05) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீற்றர் கனமழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 2 times, 1 visits today)