Site icon Tamil News

சியாரா புயல்: பிரித்தானியாவை கடுமையாகத் தாக்கும் என எச்சரிக்கை

ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் கடுமையான புயலால் பிரித்தானியா பாதிக்கப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பிரித்தானியா முழுவதும் புயலின் தாக்கங்கள் இருக்கும் என எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வார இறுதியில் தரைப்பகுதியில் 50-60 மைல் வேகம் வரை காற்று வீசும் எனவும் கடலோரப் பகுதிகளில் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை அலுவலகம் கூறுகின்றது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் நான்கு அங்குலங்கள் வரை பனிப்பொழிவு நிலைமைகள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version