இலங்கையை விட்டு வெளியேற தீவிர ஆர்வம் காட்டும் இலங்கையர்கள்!

இலங்கையில் 5 இலட்சத்து 21 ஆயிரத்து 203 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்த கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 147,000 பேர் நாட்டிலிருந்து பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்காக வெளியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 12 times, 1 visits today)