இந்தியா செய்தி

இலங்கைச் சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

இந்த ஆண்டும் சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடியவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 13,000 ஆக இருந்தாலும், இன்றை நிலவரப்படி 27,348 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த வாரம் முழுவதும் கைதிகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் கீழ், சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைதிகள் தின தேசிய விழா இன்று பிற்பகல் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் கொழும்பு பொது நூலக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி