இலங்கை

ஜெர்மனியில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களை சந்தித்த இலங்கை ஜனாதிபதி!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று (13) பிற்பகல் அந்நாட்டில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை சந்தித்தார்.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமான இலங்கை தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி திசாநாயக்கவை, வருகை தந்திருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒரு வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தொடர்ச்சியான பங்களிப்புகளையும் அவர் அங்கீகரித்து பாராட்டினார், முன்னர் பலவீனமடைந்திருந்த ஒரு அரசை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாடு இப்போது நிலையான மற்றும் உறுதியான தொடக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், இந்த நிகழ்வின் போது தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்