இலங்கை – மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளை மீண்டும் திறக்க ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இவ்வீதிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)