இலங்கை

இலங்கையில் புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகம் : வெளியான முக்கிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய வீசா முறைமை, உரிய கட்டணங்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 தேதியிட்ட 2360/24 வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.(சம்பந்தப்பட்ட வர்த்தமானியை www.documents.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).

GBS Technology Service & IVS Global Institute உடன் இணைந்து E-Visa முறையை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படும் ஆன்லைன் முறை மற்றும் அதன் இணைய இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

www.srilankaevisa.lk

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமானது, மேற்கூறியவாறு இணையவழியில் விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவருவதற்கும், விசா பெறுவதற்கு வசதி செய்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், விரைவாகவும் திறமையாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்க உத்தேசித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content