ஆசியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் காலை 10.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில் ஏற்பட்டு உள்ளது. அது 223 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதுதவிர, தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என டான்நியூஸ்டி.வி. தெரிவித்து உள்ளது.

இதேபோன்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே, படாக்ஷன் மாகாணத்தில் ஜுர்ம் கிராமத்தில் இருந்து 35 கி.மீ. தென்கிழக்கில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இன்று காலை 11.19 மணியளவில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலும், ஸ்ரீநகரிலும் இன்று காலை கடுமையான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content