ஐரோப்பா செய்தி

சுவிஸில் சீஸ் சாப்பிட்ட ஏழு பேர் பலி!! உரிமையாளர் மீது பாயும் கொலை வழக்கு

சுவிஸ் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட சீஸ் அல்லது பாலாடைக்கட்டியில் நோய்க்கிருமிகள் இருந்ததால், அதை சாப்பிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில், சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்திலுள்ள Steinerberg பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட சீஸை சாப்பிட்ட 34 பேருக்கு லிஸ்டீரியா என்னும் கிருமித்தொற்று ஏற்பட்டது.

அவர்களில் ஏழு பேர் உயிரிழந்தார்கள். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சீஸில் லிஸ்டீரியா நோய்க்கிருமி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவு காரணமாக ஏழு பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு suspended prison sentence என்னும் தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிகள் அரசை கோரிவருகிறார்கள். இந்நிலையில், வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content