இலங்கை செய்தி

மா ஓயாவில் உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

நேற்று (27) மா ஓயாவில் நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு பாடசாலை மாணவர்களின் சடலங்களும் இன்று (28) பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலங்கள் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

பாடசாலை முடிந்ததும், 11 மாணவர்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, பின்னர் நீராடச் சென்ற போது, ​​இந்த விபத்தை எதிர்கொண்டனர்.

பொல்கஹவெல புனித பெர்னாடெட் கல்லூரியின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்றே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள் அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அலவ்வ கீழ் வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய கலன லக்ஷித அமரசிங்க இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இளைய சகோதரியும் உள்ளார்.

15 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய விடாஸ் தேவிமினட் குடும்பத்தில் மூத்த குழந்தை மற்றும் ஒரு இளைய சகோதரரும் உள்ளார்.

கவீன் தேனுர பொல்கஹவெல மடலந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையும் ஆவார்.

பொல்கஹவெல பிடிவில்ல தலவத்தேகெதர பகுதியைச் சேர்ந்த ரவிது ரன்மின இரண்டு ஆண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்களின் பிரேதப் பரிசோதனை இன்று பிற்பகல் பொல்கஹவெல வைத்தியசாலையில் இடம்பெற்றது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content