இலங்கை

இலங்கை: முன்னாள் அமைச்சர் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக பரபரப்பு தகவல்

அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்க, சம்பவம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டுபாய், மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக தெரிவித்தார்.

ஜப்பானில் இருந்த தாம் ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான சுகவீனமுற்றிருந்ததாகவும், ஜப்பானிய மற்றும் இலங்கை வைத்தியர்களினால் வழங்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக நல்ல உடல்நிலை திரும்பியதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content