ஆசியா

சிங்கப்பூர் மக்களை மூளை தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் மூளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோர் மூளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்கு மக்களிடம் விளக்கிச் சொல்லத் திட்டமிடப்படுகிறது.

நரம்பியல் கோளாறுகள், அவற்றின் ஆய்வுகள் குறித்து எடுத்துச் சொல்லப்படும். ஐந்து ஆண்டுக்கு முன் “மூளை வங்கி” அமைக்கப்பட்டது.

மரணத்துக்குப் பின் மூளையைத் தானம் செய்ய 380 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை வங்கிக்கு 9 மூளைகளே கிடைத்துள்ளன.

விரைவில் முன்னோட்டச் சோதனைகளுக்கு மூளைத் திசுக்கள் கொடுக்கப்படும்.

சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம் Alzheimer’s போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதால் மூளை தானம் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.

தென்கிழக்காசியாவின் ஒரே மூளை வங்கி சிங்கப்பூரில் செயல்படுகிறது. அதன் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் Duke-NUS மருத்துவப் பள்ளியும் A*Star ஆய்வு அமைப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உடன்பாடு செய்துகொண்டன.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்