உலகம்

அணுசக்திப் படையை வலுப்படுத்த பியோங்யாங் உறுதி

வடகொரியா தனது அணுசக்திப் படையை “தரத்திலும் அளவிலும்” வலுப்படுத்தவும், தனது உளவுத்துறையின் பங்கை விரிவுபடுத்தவும் உறுதியளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த கூட்டத்தில், நாட்டின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கிம் ஜொங் உன், ஒரு வலிமையான இராணுவத்தால் மட்டுமே “உண்மையான அமைதிக்கு” உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

“சாத்தியமான எதிரிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதிலும், முக்கிய தகவல்களைச் சேகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பொது உளவு மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் செயல்பாடுகளையும் பணிகளையும் பல வழிகளில் விரிவுபடுத்துவதற்கும், அதன் இராணுவ உளவு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் திறனை தீவிரமான முறையில் மேம்படுத்துவது அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே கடந்த பத்தாண்டுகளாக பியாங்யாங் தனது அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்தி வருவதாகவும், இது அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு அதிகரித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்காவின் காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்