இலங்கை

நாவலப்பிட்டியில் லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர்: இரு மாணவர்களுக்கு பாதிப்பு

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம்,நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த கல்லூரியில் 11ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர்.அந்த வகுப்பில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து, சாப்பிடுமாறு கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை தின்றுவிட்டனர்.

லஞ்ச் ஷீட்டில் மற்றும் செய்தித்தாள்களை சாப்பிட்ட ஏழு மாணவர்களில் ஒருவர் 21ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அந்தப் பாடசாலையின் அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அம்முயற்சி கைகூடவில்லை.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content