இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்துவம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் பொதுவான இலக்குகளை அடைவதற்காக இணைந்து செயல்பட இச்சந்திப்பின்போது ஒப்புக்கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!