ஐரோப்பா

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு அருகே குவிந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் உணவு பெற காத்திருந்த நிலையில் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாத்திரங்கள் மற்றும் வாத்தியங்களுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனிதாபிமான பேரழிவுக்கு பிரித்தானிய அரசு மௌனமாக இருப்பதை ஏற்க முடியாது” எனக் கோஷமிட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், உணவுக்காக நிவாரண முகாம்களுக்கு வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 5,000 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்