இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகள்

பாகிஸ்தானின் உயரதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:

“நம் நாட்டின் பிரபலமான அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி, போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். ஓய்விற்குப் பின் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காக நாடு விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.”

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் உஸ்மான் பஸ்தாருக்கு நெருக்கமான ஒருவர், தனது மகளின் திருமண பரிசு என்ற பெயரில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில், அரசியல்வாதிகள் பொதுமக்களால் பிடிபடுகிறார்கள். ஆனால் அதிகாரிகள் தப்பித்து விடுகிறார்கள்” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்