உலகம் செய்தி

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்!!!! இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கட்சி மீதான அழுத்தம் காரணமாகவே இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக இவர்கள் தோன்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் உள்ள 266 இடங்களில் 49 இடங்களை பிடிஐ கட்சியின் உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தற்போது 42 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களையும் பெற்றுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி