இலங்கை செய்தி

ஜானகவுக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவது மற்றும் ஆணைக்குழுவின் அங்கத்துவம் தொடர்பான தீர்மானம் இன்று (24) பாராளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அங்கு தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, இனிமேல் அந்த ஆணைக்குழுவில் ஜனக ரத்நாயக்கவின் உறுப்புரிமை ரத்து செய்யப்படவுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பில் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எதிர்க்கட்சியில் இணைந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.

குமார வெல்கம, வடிவேல் சுரேஷ் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை