இலங்கை

இலங்கையில் புதிதாக கையடக்க தொலைப்பேசிகளை கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கான செய்தி : புதிய விலை அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு புதிய பெறுமதி சேர் வரி சீர்த்திருத்திற்கு அமைய நாளை (01.01.2024) முதல் புதிய வரி கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அனைத்து வகையான கையடக்க தொலைப்பேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என  கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் “நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை கிட்டத்தட்ட 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வின் மூலம் கையடக்கத் தொலைபேசி சந்தையில் சுமார் 50 வீதம் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நாளை முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்