இலங்கை செய்தி

சிறு நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்

நாட்டில் இயங்கி வரும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை நிறுவி அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

குற்றவியல் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content