இலங்கை செய்தி

திருகோணமலையில் மோட்டார்சைக்கிள் மற்றும் வேன் விபத்து – மூவர் படுகாயம்

திருகோணமலை உட்துறைமுக வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் டைக் வீதியைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளையான ஜூட் கவிசாலினி (வயது 9), ஜுட் செரின் (வயது 6) என்ற இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 9 வயதான மாணவி மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த வானில் பயணித்த நோயாளி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை உட்துறைமுகவீதி ஊடாக பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு தாயுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்மீது சீனக்குடாவில் இருந்து வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றி வந்த வேன் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மாணவிகள் புனித மரியாள் கல்லூரி மாணவிகள் எனவும் தெரியவருகின்றது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content