ஆறு மாதங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள சட்டம்
தங்களுடைய வாழ்க்கையை தாங்களே விரும்பி மாய்த்துக் கொள்ள முடியுமான புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு அபாயகரமான நோயினால் தமது உயிர் 6 மாதங்கள் அல்லது அதிலும் குறைந்த காலத்துக்கு தான் நீடிக்கும் என வைத்தியர்களால் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தால் இதற்கிணங்க தமது உயிரை முடித்துக் கொள்ள கொள்ளலாம் என இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வைத்திய நிபுணர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசரின் முன்னிலையில் இந்த மரணம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிலதெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களுக்கு செல்லுபடியாகும்.
(Visited 46 times, 1 visits today)





