இலங்கை செய்தி

“தையிட்டி மண் தமிழர்களின் சொத்து” – விண்ணதிர முழங்கிய கோஷம்: பொலிஸார் குவிப்பு!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமது காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே காணி உரிமையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சட்டவிரோத கட்டிடங்களை உடனே அகற்று என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா எனவும் கேள்வி எழுப்பினர்.

தையிட்டி மண் தமிழர்களின் சொந்த மண், அதனை உரிமையாளர்களுக்கு வழங்கு எனவும் கோஷங்களை எழுப்பினர்.

தையிட்டி விகாரை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

விகாரையின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, விகாரையின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்ககூடாது என பொலிஸார் அறிவுறுத்தினர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலையும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தினர்.

அதேவேளை, தையிட்டி விகாரை பிரச்சினையானது தென்னிலங்கையிலும் எதிரொலிக்கின்றது.

விகாரைமீது எவரும் கைவைக்ககூடாது என தேசியவாத அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

மறுபுறத்தில் காணிகளை அதன் உரிமையாளர்களிடமே கையளிக்க வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

குறித்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை