களனி பல்கலைக்கழகம் மீள திறக்கப்படுகின்றது

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கற்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமையும், மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடம் டிசம்பர் 18ஆம் திகதியும் திறக்கப்படவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
(Visited 13 times, 1 visits today)