இந்தியா

கர்நாடகா- 3 பெண்கள் மீது ஆசிட் வீச்சு… கல்லூரியில் கேரள மாணவன் வெறிச்செயல்!

கர்நாடகா மாநிலத்தில் அரசு கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் ஆசிட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடாபா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடக மாநில பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகள் துவங்கியது. இதையடுத்து கல்லூரியில் மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென அங்கிருந்த மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசி உள்ளார்.

இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மூவரும் அலறித் துடித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் மீது ஆசிட் வீச்சு

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (23) என்பதும், அவர் அண்டை மாநிலமான கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் எதற்காக மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அபின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ பயின்று வந்துள்ளார். மேலும் ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவிகள் 3 பேர் மீது கல்லூரி மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content