கருத்து & பகுப்பாய்வு

வேலைவாய்ப்புகள் பறிபோகாது – பில்கேட்ஸ் கொடுத்த விளக்கம்

உலகமெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பம் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று கூறப்படும் நிலையில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் மற்றும் உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் இதற்கு வேறு விதமாக விளக்கம் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பில்கேட்ஸ், “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது.

1900ம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்த நிலையில், விவசாய வேலைகளை தாண்டி பல புதிய வேலைகளை உருவாக்கி உள்ளோம். அதுபோல ஏஐ தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். மக்களின் வாழ்க்கையை இது எளிதாக்குவதோடு வேகமாகவும் செய்ய முடியும்.

அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் இந்த செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும். மேலும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கான தனியாக ஒரு கருவிகள் தேவையில்லை. ஏற்கெனவே நாம் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை வைத்தே இந்த AI தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content