விமலுக்கு இடியாக வந்த தீர்ப்பு – தில்வின் சில்வாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்
ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவிற்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதற்காக ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னதாக வர்த்தக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி விமல் வீரவன்ச மனுத்தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்றம் வர்த்தக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
வீரவன்சவின் “நத்த வெனுவட்ட அத்த” என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில உள்ளடக்கங்கள் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டப்பின் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




